விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட 13 பேர் வைத்தியசாலையில்..!!
Read Time:54 Second
பொகவந்தலாவ – மோரா கிழ் பிரிவு தோட்டத்தில் இன்று (14) இடம்பெற்ற விட்டு வைபவம் ஒன்றில் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட 13 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வாந்தி போன்ற சுகயீன நிலை ஏற்பட்ட நிலையில், பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 01.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மூன்று ஆண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் எட்டு பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.
Average Rating