முன்னாள் போராளிகள் குறித்த விபரங்களை அறிவிக்கவும்..!!

Read Time:1 Minute, 45 Second

290565996Untitled-1புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த தகவல்கள் மற்றும் வைத்திய அறிக்கைகளை திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள யோசனையின் அடிப்படையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, புனவாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் விபரங்கள், அவர்கள் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்ற அறிக்கைகள் போன்றவற்றை, உடனடியாக வட மாகாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கையளிக்குமாறும் சுகாதார அமைச்சர் கோரியுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தான் அண்மைக் காலமாக பலர் உயிரிழக்க நேரிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இது குறித்து ஆராயும் பொருட்டு, பிரேரணை ஒன்று வட மாகாண சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூடப்பட்டுள்ள கிணறுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்..!!
Next post 3 அடி அம்மன் சிலையைக் கடத்திய மூவர் கைது, மற்றொருவர் குறித்து விசாரணை..!!