சுவிட்சர்லாந்தில் ரெயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபர்..!!

Read Time:1 Minute, 36 Second

201608141115003712_Man-sets-fire-stabs-passengers-on-train-in-Switzerland_SECVPFசுவிட்சர்லாந்தில் ஜெனீவா அருகே ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்தனர். ரெயில் புச்ஸ்- சென்வால்ட் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.

அப்போது அதில் பயணம் செய்த 27 வயது வாலிபர் திடீரென தான் வைத்திருந்த திரவத்தை ரெயில் பெட்டியில் கொட்டி கவிழ்த்தார். உடனே அதில் இருந்து கரும்புகையுடன் தீ வெளியாகி ரெயில் பெட்டியில் பரவியது. இதனால் பயணிகள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். அதை ரசித்த வாலிபர் தான் வைத்திருந்த கத்தியால் பயணிகளை சரமாரியாக குத்தினான்.

இச்சம்பவத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 6 வயது குழந்தையும் அடங்குவர். தீக்காயம் மற்றும் கத்திக்குத்து காயம்பட்டவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். கத்திக்குத்து சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மறைந்த! பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் கடைசி நிமிடங்கள்…!! (வீடியோ)
Next post அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல் பாருங்கள் வீடியோ…!!