மஹரகமை பிரதேசத்தில் முள்ளம்பன்றியை காப்பாற்ற சென்று உயிரிழந்த காவற்துறை உத்தியோகஸ்தர்..!!
Read Time:58 Second
பாதையை கடந்து கொண்டிருந்த முள்ளம்பன்றியொன்றை காப்பாற்றுவதற்காக உந்துருளியின் தடுப்பை வேகமாக அழுத்தியதன் காரணமாக அது புரண்டதில் காயமடைந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.மஹரகமை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குற்றத் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.அவர் மேலும் சில காவற்துறை அதிகாரிகளுடன் இன்று அதிகாலை பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Average Rating