யாழில் காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு..!!
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணாமல்;போயிருந்த பாடசாலை மாணவியொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காரைநகர், திக்கரையை சேர்ந்த சண்முகராஜ துவாரகா எனும் பதினாறு வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றுமுன்தினம் இரவு சுமார் எட்டுமணியளவில் வீட்டில் இருந்து குறித்த மாணவி காணாமல்போ யிருந்தார்.
இதனையடுத்து அவரை தேடிய அவரது பெற்றோர், இது தொடர்பாக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பெற்றோர் இணைந்து ஈடுபட்டிருந்த போதும் குறித்த மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று மாலை குறித்த மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரம் அளவில்உள்ள வளவொன்றுக்குள் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவ் வளவிற்குள் தேங்காய் பறிப்பதற்காக வந்த சிலரே கிணற்றுக்குள்சடலமிருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
மேலும் இவ் மாணவி எவ்வாறு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார், இவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள்போடப்பட்டாரா? அல்லது தற்கொலை சம்பவமா? அல்லது இவரது மரணம் எவ்வாறிடம்பெற்றது என்பது தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating