மூதூர் சண்டை முற்றுப்பெற்றது
Read Time:1 Minute, 9 Second
மூதூரில் இதுவரை நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதே செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் தகவலின் படி 18,000 முஸ்லிம், சிங்கள மக்கள் மற்றும் 15,000 தமிழ் மக்களும் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சர்வதேச செய்தி நிறுவனங்களின் பிரகாரம், புலிகள் தமது நிலைகளுக்கு திரும்பியுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. மூதூரின் களநிலவரம் தொடர்பாக விடுதலைப்புலிகளோ அன்றி சிறிலங்கா அரசோ வேறு எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை