நிலக் கண்னி வெடி வெடித்து யாழில் ஒருவர் பலி..!!

Read Time:1 Minute, 16 Second

416946215Untitled-1யாழ்ப்பாணம் – முகமாலை – கிலாலி பகுதியில் நிலக் கண்னி வெடி அகற்றப்படாத பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 12ம் திகதி விறகு வெட்டுவதற்காக அப் பகுதிக்குச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் இது குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இதன்படி, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, நிலக் கண்னி வெடிகள் அகற்றப்படாத பகுதி ஒன்றில் இருந்த அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு பலியானவர் கிலாலி பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

நிலக்கண்னி வெடி வெடித்ததாலேயே இவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் ஜப்பான் யுவதிக்கு மயக்கமருந்து கொடுத்து இலங்கையர் செய்த காரியம்..!!
Next post கூட்டமைப்பை இன்று சந்திப்பதற்காக அமெரிக்க தூதுவர் யாழ்.விஜயம்..!!