உத்தரபிரதேசத்தில் ஈட்டி கண்ணில் பாய்ந்து 6 வயது சிறுவன் பலி..!!

Read Time:1 Minute, 27 Second

201608151308028538_6-year-old-boy-killed-in-spear-storming-in-UP_SECVPFஉத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பி‌ஷன்புராவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முராத் (வயது 6) என்ற மாணவன் யூ.கே.ஜி. படித்து வந்தான். அந்த பள்ளியில் சுதந்திர தின விளையாட்டு போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

மதியான நேரத்தில் சாப்பிடுவதற்காக சிறுவன் முராத் அந்த மைதானம் வழியாக சென்றான். அப்போது விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் ஈட்டி எறிந்து பயிற்சி மேற்கொண்டார்.

அந்த ஈட்டி நேராக பாய்ந்து வந்து சிறுவன் தலையில் விழுந்தது. இதில் அவன் கண்ணை குத்திக் கொண்டு மூளை பகுதிக்குள் பாய்ந்தது.

படுகாயம் அடைந்த அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தான். ஈட்டி வீசிய மாணவன் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் விமான விபத்தில் 6 பேர் பலி..!!
Next post நேரடி நிகழ்ச்சியில் அரங்கேறிய அசம்பாவிதம்… குழந்தை பிடியிலிருந்து தப்பியிருக்குமா…!! வீடியோ