நடிகை ராதாவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து: நடிகை மீது மீண்டும் புகார்..!!
Read Time:1 Minute, 8 Second
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் உமாதேவி. இவர் கடந்த வாரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ள ராதாவிடம் இருந்து தனது கணவரை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அந்த புகார் மனு விசாரணைக்காக தியாகராயநகர் துணை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் உமாதேவி தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணனை சந்தித்து புதிதாக ஒரு புகார் மனுவை கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில் நடிகை ராதாவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், உடனடியாக நடிகை ராதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
Average Rating