சட்டவிரோத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பிணை..!!
அமைச்சர் கபீர் ஹாசீமின் ஒருங்கிணைப்பு செயலாளர் எசல பண்டாரவை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவனெல்லை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியை சட்டவிரோதமாக தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாகவே எசல பண்டார மற்றும் ரெஜினால்ட் கமகே ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ரெஜினால்ட் கமகேவையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தலா 10 ஆயிரம் பெறுமதியான ரொக்க பிணை மற்றும் தலா 2 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளிலும் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்கள் இருவரையும், ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு தினங்களில் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating