சைக்கிளில் சென்ற முதியவர் பலி…!!
திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக சைக்கிள் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் கிண்ணியா – குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் ஹம்ஷா (65) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளில் சென்ற பீ.ஆர்.பைறூஸ் (25), என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating