பிரான்ஸ் கடற்படை கப்பல் இலங்கை வருகை…!!
பிரான்ஸ்சின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
கடற்படையின் பாரம்பரியங்களுடன் குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளையிடும் அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண கடற்படை கட்டளைக்கான தலைமையத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண பிரதி கட்டளை தளபதி மெரில் சுதர்சன உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் நினைவுபரிசுகளும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஸ்ரீலங்காவில் சஞ்சரிக்கும் பிரான்ஸ் கப்பல், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள திட்டங்கள் சிலவற்றிலும் பங்கேற்கவுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating