பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுக்கு பிறகு மீட்பு…!!

Read Time:2 Minute, 21 Second

201608161219483970_Woman-who-kidnapped-baby-20-years-ago-then-raised-her-as-her_SECVPFதென் ஆப்பிரிக்காவில் குரூட் செக்குர் ஆஸ்பத்திரியில் கடந்த 1997-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஷெபானி நர்ஸ் என பெயரிட்டனர்.

தாய் மயக்கமாக இருந்த போது ஒரு பெண் பிறந்த பச்சிளங் குழந்தையை கடத்தி சென்றார். அதை தனது குழந்தை எனக்கூறி வளர்த்து வந்தார்.

இதற்கிடையே கடத்தப்பட்ட குழந்தை வளர்ந்து பெரியவளாகி 17 வயது நிரம்பிய நிலையில் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அதே பள்ளியில் படித்த ஒரு சிறுமி இவளது முக தோற்றத்தில் இருந்தாள்.

எனவே உடன் படித்த இவளது தோழிகள் அந்த மாணவி உனது உடன் பிறந்த சகோதரியா? என கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அவள் இது குறித்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் குழந்தையை கடத்திய பெண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அப்போது, அவள் தனது மகள் என்றாள். அவளது பதில் திருப்தி அளிக்காததால் போலீசில் புகார் செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது. அப்போது டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் அவள் கடத்தப்பட்ட குழந்தை ஷெபானி நர்ஸ் என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து கோர்ட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு கடத்தப்பட்ட சிறுமி ஷெபானி நர்ஸ் அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தது. மேலும் குழந்தையை கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷியாவில் 43 கொசுக்கடி வாங்கிய 9 வயது சிறுமிக்கு பரிசு…!!
Next post வேலூரில் துப்பட்டா கழுத்தை இறுக்கி 2-ம் வகுப்பு மாணவி பலி…!!