இனம்தெரியாத நபர்களினால் பல்கலைக்கழக மாணவி கடத்தல்..!!
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தைப் பகுதியில் வைத்து வீதியால் சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் இனம்தெரியதவர்களால் வான் ஒன்றில் நேற்று கடத்திச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு வழங்கிய அவசர தகவலையடுத்து, வெல்லாவெளி பிரதான வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் வானை நிறுத்த முற்பட்டபோது அவர்களின் சமிக்கையை மீறி தப்பிச் சென்றதாகவும் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸார் வாகனச் சாரதி உட்பட இருவரை மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்திச்செல்லப்பட்ட மாணவியை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating