தம்புள்ள பிரதேச சுற்றுலா விடுதியில் பறவைகள், விலங்குகள் சிக்கின..!!
தம்புள்ளை, கபுவத்த பிரதேசத்தில் உல்லாச பயணிகளுக்கு காண்பிப்பதற் காக சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் மிருகங்களை வைத்திருந்த சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சீகிரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் சோதனை நடவடிக்கை யின்போது குறித்த விடுதியின் பின்புறமாக காணப்பட்ட இரும்புக் கூடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததனைக் கண்டுபிடித்தனர்.
ஆந்தை, முள்ளம்பன்றிகள் மற்றும் கல்லாமைகள் ஆகியனவே கைப்பற்றப் பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவை காயமடைந்திருந்ததனால் சிகிச்சையளிப்பதற்காகவே தான் கொண்டு வந்திருந்ததாக குறித்த விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating