பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்புகின்றார்…!!

Read Time:2 Minute, 21 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்ப உள்ளார்.

ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தனர்.

பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று இரவு இலங்கை வந்தடைவார்கள் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சீன விஜயத்தின் போது கைத்தொழிற்சாலைகள் கொள்கலன் களஞ்சியசாலைகள் தொழில்நுட்ப பூங்காக்கள் நிதி நிறுவனங்கள் புத்தாக்க உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு இலங்கையில் இவற்றை எவ்வாறு பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கவனம் செலுத்தியுள்ளனர்.

அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாபா சம்பிக்க ரணவக்க பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சிரேஸ்ட ஆலோசகர் சரித ரத்வத்த பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி உள்ளிட்ட சிலர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டிந்தனர்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாமலின் வழக்கு தொடர்பில் இரு பெண்களுக்கு விளக்கமறியல்…!!
Next post இளம் யுவதி கடத்தல் ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!