கொடுங்கையூரில் வீட்டில் தீ விபத்து: நகை, பணம் நாசம்…!!

Read Time:2 Minute, 9 Second

201608170834297815_Kodungaiyur-house-fire-accident-jewelry-money-spoiling_SECVPFகொடுங்கையூர் எழில் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராணியம்மாள் (வயது 58). இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் இவரது மகன் பூபாலன் வசித்து வருகிறார். ராணியம்மாள் வீட்டின் மேலே அட்டையால் அமைக்கப்பட்டு அதன் மேல் தார் பூசப்பட்ட கொட்டகை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று காலை 11 மணியளவில் திடீரென ராணியம்மாளின் வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.

தகவல் அறிந்ததும் எழில் நகர் மற்றும் வியாசர்பாடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், வாசிங்மெஷின், டி.வி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும், ரூ.10 ஆயிரம் ரொக்கம், 15 பவுன் தங்கநகை ஆகியவை நாசமாகின. வீட்டின் பத்திரம், ரேஷன் கார்டு போன்ற அனைத்து ஆவணங்களும் தீயில் கருகின.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் தீ வைத்தார்களா? என்று விசாரித்து வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் யுவதி கடத்தல் ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!
Next post கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை: மனைவி கைது..!!