நாடு கடத்தப்பட்ட ஆறு பேர் விமான நிலையத்தில் கைது…!!

Read Time:2 Minute, 17 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த ஆறு இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமானம் திரும்பிய இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனையை சேர்ந்த இவர்கள் கடந்த மாதம் 21 ஆம் திகதி காத்தான்குடி கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவர்கள் பல தினங்களாக கடலில் தத்தளித்து வந்துள்ளனர்.

இந்த அகதிகள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த அறிவிப்பை அடுத்து, அவுஸ்திரேலிய பாதுகாப்பு ரோந்து கப்பல் உன்னிப்பாக அவதானித்து வந்தாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய படகொன்று 6 அகதிகளை காப்பாற்றியுள்ளது

இதன் பின்னர் இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோல் குறித்த அபூர்வ செய்திகள்…!!
Next post பலத்த காற்றினால் பாரிய தீ – உடைமைகள் கருகி நாசம்..!!