பலத்த காற்றினால் பாரிய தீ – உடைமைகள் கருகி நாசம்..!!

Read Time:2 Minute, 36 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட பலத்த காற்றில் மின்கம்பங்களின் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்ந்து ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளொன்றும் பல பனைமரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

தற்சமயம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றின் காரணமாக வீதியோரத்தில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்களின் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றிக் கொண்டு அறுந்து வீதியோரத்தில் வரிசையாக நின்றிருந்த பனை மரங்கள் மீது விழுந்துள்ளன.

இதனால் காய்ந்து போயிருந்த பனை மட்டைகளில் இலகுவாகத் தீப்பற்றிக் கொண்டதோடு பனை மரங்களின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது.

சம்பவத்தைக் கேள்வியுற்று உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தலைமையிலான குழுவினர், தீயணைப்புப் பிரிவு, மற்றும் மின்சார சபை ஆகியவற்றை அழைப்பித்ததோடு தீ வீடுகளுக்கு பரவாமல் அணைப்பதில் ஈடுபடுட்டனர்.

தீ தொடர்ந்தும் பரவாமல் தடுத்ததன் மூலம் பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரதேச பொதுமக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் இலங்கை மின்சார சபையினர் ஆகியோர் ஆராய்ந்து வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு கடத்தப்பட்ட ஆறு பேர் விமான நிலையத்தில் கைது…!!
Next post சிசுவின் சடலம் மீட்பு…!!