சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது…!!

Read Time:2 Minute, 3 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (7)மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் செங்கலடி எல்லை வீதியில் வசித்து வந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயா விடுமுறை தினத்தில் சட்ட விரோதமான முறையில் சாரயம் விற்பனை செய்வதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டை சோதனை செய்த பொலிஸார், அவ்வீட்டிலிருந்து 1860 மில்லி லீற்றர் சாராயமும், சந்தேகத்தின் பேரில் 41 வயதுடைய பெண்ணொருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை மேலதிக விசாரணைக்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிளகு மருத்துவ குணங்கள்…!!
Next post நீராடச் சென்றவர்களுக்கு நடந்த விபரீதம் – இருவரின் சடலம் மீட்பு..!!