பிரிட்டன்: மருத்துவமனை சுவரிலிருந்து தேன் கசிந்த வினோதம்…!!

Read Time:2 Minute, 2 Second

160817134355_bee_640x360_spl_nocreditபிரிட்டனின் வேல்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சுவர் வழியாக தேன் கீழே சொட்டியதை அங்கிருந்த வயது முதிர்ந்த நோயாளிகள் கவனித்ததை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன.

கடந்த வாரம் அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இரு பெரிய தேன் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தேனி வளர்ப்பு வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர்.

குறைந்தது 5 வருடங்களாக இந்த தேனீக்கள் அங்கு கவனிக்கப்படாமல் இருந்து, அவை பல்லாயிரக்கணக்கில் பெருக காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
தற்போது, வெப்பமான வானிலை காரணமாக அதன் அடை மற்றும் தேன் உருகி மேற்கூரை வழியாக கசிந்துள்ளது.

அங்கிருந்த தேனீக்களை முழுமையாக அகற்றி காலியான தேன் கூடுகளுக்கு இடமாற்றுவதற்கு தேனி வளர்ப்பு வல்லுநர்களுக்கு ஒரு வாரமானது.

இந்த பணிகளுக்கு பிறகு அங்கு மிஞ்சியுள்ள பெரிய அளவிலான தேன் அடை, சோப், மெழுகுவர்த்தி மற்றும் மரச்சாமான் மெருகுப்பொருள் செய்யவதற்கு பயன்படுத்தப்படும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி…!!
Next post 5,500 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக சிஸ்கோ நிறுவனம் அறிவிப்பு…!!