கலிபோர்னியா: காட்டுத்தீயினை அணைக்க நடக்கும் போராட்டம் தொடர்கிறது…!!
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், தங்கள் வீடுகளை விட்டு 80,000 மக்கள் தப்பியோட காரணமாக இருந்த மிகப் பெரிய காட்டுத்தீயினை கலிபோர்னிய மாநில தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், சான் பெர்னார்டினோ அருகே ஏற்பட்ட காட்டுத்தீயின் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க வன சேவைத் துறை தெரிவித்துள்ளது.
கடுமையாகப் பரவியுள்ள இந்த காட்டுத்தீ பல உடைமைகளை அழித்துள்ளது என்றும், 100 சதுர கிலோமீட்டர் தூரத்துக்கும் மேலாகவும் இந்த காட்டுத்தீயினால் ஏற்பட்ட பேரழிவு தடங்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய பல குடும்பங்களும், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் போது, அங்கு எதுவும் எஞ்சியிருக்காத நிலையை அவர்கள் சந்திப்பார்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating