ரயில் மீது கல் வீச்சு : 2 பேர் விளக்கமறியலில்…!!
நாரஹேன்பிட்டிய அருகில் ரயில் ஒன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட இரு இளைஞர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
களனிவெளி ரயில் பாதையில் அவிசாவளையில் இருந்து புறக்கோட்டையை நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் ரயில் மீது கல்லெறிந்தார்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேரை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மூன்று சந்தேக நபர்களில் இருவருக்கே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating