வடமாகாணத்தின் சிறந்த பண்ணையாளர்களைக் கெளரவிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..!!
வடமாகாணத்தில் சிறந்த பண்ணையாளர்களைக் கெளரவிப்பதற்கான விண்ணப்பங்களை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக் கோரியுள்ளது.
வடமாகாணத்தில் ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில், மாவட்ட ரீதியாகச் சிறந்த பண்ணையாளர்களைத் தெரிவு செய்து அவர்களைக் கெளரவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பண்ணையாளர்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள கால்நடை அலுவலகங்களில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பெற்று விண்ணப்பிக்க முடிவும்.
விண்ணப்ப முடிவின் இறுதித் திகதி எதிர்வரும் 30ஆம் திகதியாகும். பூரணப்படுத்திய விண்ணப்பப் படிவத்தை பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் ஒப்படைக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் குறித்த போட்டியில் தோற்றி வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த வருடம் பங்குபற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating