திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட பெருந்தொகை மாசுகள்..!!
சமுத்திரவியல் மற்றும் அதன் வளங்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக கோரல் பாறை என்று அழைக்கப்படும் கடல் தாவர வளர்ப்பு பாறைகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதற்கட்டாக வேலைத்திட்டம் நேற்று திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் கோரல் பாறைகள் மீது காணப்படும் மாசு, குப்பைகள் மற்றும் பொலித்தீன் பைகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்திற்கு கடல் அடிவாரத்திற்கு செல்லக்கூடிய சுமார் 350 சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் நேற்று இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், 20 உழவுயந்திர கொள்ளளவு கொண்ட மாசு மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்பட்டன என்று மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating