வெல்லாவெளியில் யுவதியை கடத்திய நபர்கள் விளக்கமறியலில்..!!
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் யுவதியை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யுவதியை கடத்திச் செல்ல பயன்படுத்தி வானை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating