சிறுவர் கொடுமை தொடர்பில் 10732 முறைப்பாடுகள்…!!

Read Time:2 Minute, 32 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)கடந்த வருடம் மாத்திரம் சிறுவர் கொடுமை தொடர்பாக 10732 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பான சந்தேநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் குற்றவாளிகளுக்கு சட்டரீதியான தண்டனைகளை பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தொலைபேசி இலக்கத்தினூடாகவும், கடிதம் மூலமாக 6889 முறைப்பாடுகள் கிடைத்த போதும் அதில் 14 முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவினர் நேரடி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 2000 முறைப்பாடுகளின் விசாரணை அறிக்கையானது நீதிமன்றில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த முறைப்பாடுகளை துரிதமாக விசாரிப்பதற்காக பொலிஸ்மா அதிபர், சிறுவர் மற்றும் பெண்கள் நடவடிக்கைக்கு பொறுப்பான அலுவலகத்தின் பணிப்பாளர் ஊடாக சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கும் படியும் ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் படியும் நடவடிக்கை எடுக்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவோருக்கான விசேட அறிவுறுத்தல்..!!
Next post தந்தை, மகன் மகள் சடலமாக மீட்பு : கொழும்பு கொட்டஹேன பகுதியில் பதற்றம்..!!