அமைப்பாளர் பதவியை இழந்தவர்கள் கட்சி உறுப்புரிமையையும் இழக்கும் அபாயம்…!!
அண்மையில் தொகுதி அமைப்பாளர் பதவியை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சி உறுப்புரிமையையும் இழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களாக கடயைமாற்றிய பவித்ரா வன்னியாரச்சி, ரோஹித அபேகுணவர்தன, சீ.பி ரட்நாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, உபேக்சா சுவர்ணமாலி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் தொகுதி அமைப்பாளா பதவிகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்கத் தவறும் இந்த உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்படலாம் என கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்வில் பங்கேற்குமாறு ஏற்கனவே இந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்டு நிகழ்வில் பங்கேற்காத உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating