கணவனை இழந்த பெண்களுக்கு சம்பந்தனால் தற்காலிக வீடுகள் கையளிப்பு..!!

Read Time:2 Minute, 6 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90சம்பூர் பகுதியில் மீளக்குடியேறிய, கணவனை இழந்த 41 பேருக்கு, கனேடியத் தமிழர் பேரவை மற்றும் திருகோணமலை நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து, அமைத்துள்ள தற்காலிக வீடுகளில் 23ஐ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பயனாளிகளிடம் கையளித்தார்.

இத்திட்டத்தின் இணைப்பாளர் இ.கைலைவாசனின் தலைமையில், இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பயனாளிகளிடம் வீடுகளுக்கான சாவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

250,000 ரூபாய்கள் செலவில் 250 சதுர அடிகள் கொண்டதாக இவ்வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் ஆகியோரும் பங்கேற்று இருந்தனர்.

இத்திட்டத்தில் 41 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில், 18 வீடுகள் ஏற்கனவே பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நள்ளிரவில் பெண்ணின் அலறல் சத்தத்தால் உறைந்து போகும் மதுரையில் இருக்கும் ஒரு கிராமம்…!! வீடியோ
Next post சொர்க்கபுரியாக மாறும் இலங்கை! படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்…!!