தென்ஆப்பிரிக்காவில் தாயை கற்பழிக்க முயன்றவனை குத்திக்கொன்ற 6 வயது சிறுவன்…!!
தென்ஆப்பிரிக்காவில் வடக்கு கேப் பகுதியைச் சேர்ந்தவர் செகோமோட்சோ கேர்சேவ். இவர் தனது 6 வயது மகன் குட்ல்வானோ கேர்சேப் அவனது அண்ணன் தபிசோ (8) ஆகியோரை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஒரு மர்ம நபர் திடீரென குறுக்கிட்டான். அவன் திடீரென செகோ மோட்சோவின் தோற்பட்டையை தொட்டான். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திரும்பி பார்த்து என்ன என்று கேட்டார்.
உடனே அவன் அவரிடம் பணம் கேட்டான். அவர் மர மறுக்கவே, ஆத்திரமும், கோபமும் அடைந்த அவன் செகோமோட்சோவை தாக்கி கீழே தள்ளினான். அதைப் பார்த்த மகன்கள் குட் லவானோ மற்றும் தபிசோ ஆகியோர் காப்பாற்ற முயன்றனர்.
இதற்கிடையே அந்த மர்ம நபர் செகோமோட் சோவை கற்பழிக்க முயன்றான். அவனிடம் இருந்து தப்ப அவர் போராடினார்.
இதைப் பார்த்த 6 வயது குட்லவானோ கேர்சேப் அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து தாயை கற்பழிக்க முயன்றவனை சரமாரி குத்தினான். இதனால் படுகாயம் அடைந்த அவன் அதே இடத்தில் இறந்தான்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது என்னை காப்பாற்றவே எனது மகன் காமுகனை கொன்றான் என செகோமோட்சோ தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating