துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி..!!
துருக்கி நாட்டில் சிரியா எல்லைப் பகுதியில் உள்ளது காஜியண்டெப் நகரம். இந்த நகரத்தில் நேற்று இரவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.
இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சுமார் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக காஜியண்டெப் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று இரவு 10.50 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பிற்கான அரபு நாட்டு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் காஜியண்டெப் நகர எம்.பி தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating