சிங்கராஜ வனப்பகுதியில் மரை வேட்டை அதிகரிப்பு…!!
உலக மரபுரிமைகளில் ஒன்றான சிங்கராஜ வனப்பகுதியில் மரை வேட்டை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிகுள் மரை வேட்டையில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாரிய தொகையான மரை இறைச்சி நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலை தொடர்பில் கருத்திற்கொண்டு மரை வேட்டையை தடுப்பதற்கு சிங்கராஜ வனப்பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய சிங்கராஜா வனப்பகுதியில் தொடர் கண்காணிப்பு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் தென்பிராந்திய உதவிப் பணிப்பாளர் பிரசன்ன விமலதாச தெரிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating