திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் மைத்திரி – சாரதிக்காக காரில் காத்திருந்தாரா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியாருடன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது பாரியாருடன் நேற்று இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு சென்று, பின்னர் இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது இலங்கை ஜனாதிபதியை ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
ஏழுமலையானை தரிசித்துவிட்டு அவர்கள் விருந்தினர் மாளிகை செல்ல காரில் ஏறியபோது சுமார் 10 நிமிடங்கள் வரை சாரதிக்காக காத்திருந்தனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கும், தேவஸ்தான அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating