தகாத உறவின் விளைவு ; யாழ்ப்பாணத்தின் பெண் எரித்துக் கொலை…!!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – நாவக்குளி பகுதியில் தகாத உறவு முறையினால் பெண்ணொருவர் தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.
தீயினால் எரியூண்ட நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் நாவக்குளி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்னே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் தகாத உறவே குறித்த கொலைக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சாவகச்சேரி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating