12 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!

Read Time:2 Minute, 58 Second

201608221153470296_7-year-old-girl-had-committed-suicide-after-being-molested_SECVPFராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்னி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசாருக்கு தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ள நிலையில் அந்த சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.

கூலி தொழிலாளிகளான அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிடும் சூழ்நிலையில் அதே வீட்டில் தங்கியிருக்கும் 12 வயது சிறுவன் கடந்த 12-ம் தேதியில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக அவளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

அந்த சிறுமியின் உயிர் பிரிந்த 15-ம் தேதியும் அவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விபரத்தை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 12-ம் தேதியன்று பள்ளிக்கு செல்லாத அந்த சிறுமி 13-ம் தேதி பள்ளிக்கு வந்ததாகவும், மற்ற மாணவ-மாணவிகளிடம் சகஜமாக பழகும் இயல்பு கொண்ட அவள், அன்றைய தினம் சோகமாக காணப்பட்டதாகவும், யாரிடமும் பேசாமல் இருந்ததாகவும் பள்ளியில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அந்த 12 வயது சிறுவனை தற்போது கைது செய்துள்ள போலீசார், அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் இளம்பெண் கடத்தி, கொல்லப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!!
Next post வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க…!!