பல இலட்ச ரூபாய் கொள்ளை ; காலியில் பரபரப்பு…!!
காலி – அம்பலங்கொடையில் பெண் ஒருவரிடமிருந்து 18 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்கிக்கு பணத்தினை வைப்பிலிட குறித்த பெண் சென்றவேளையிலே பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தனியார் வங்கியிலிருந்து பெற்றுக் கொண்ட பணத்தினை பிரிதொரு வங்கியில் வைப்பிலிடச் சென்ற வேளையிலேயே இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக, அப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 வயதுடையான குறித்த பெண், அம்பலங்கொடை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating