சாகப் போகிறேன்: மாமியாருக்கு போனில் தகவல் கூறிவிட்டு வாலிபர் தற்கொலை…!!
கண்ணமங்கலம் அருகே உள்ள விண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகன் ரமேஷ் (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், திருவண்ணாமலை அருகே உள்ள ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்த செந்தாமரை மகள் புவனேஸ்வரிக்கும் (வயது 21) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில், ரமேஷ் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை உட்கொண்டும் வயிற்று வலி குணமாக வில்லை என கூறப்படுகிறது. கடந்த 15-ந் தேதி ரமேசுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
விண்ணாங்குளம் ஏரிக்கு சென்றார். அங்கு கரையில் உட்கார்ந்து, தயாராக வாங்கிக் கொண்டு வந்த மதுவுடன், விஷம் கலந்து குடித்தார். பின்னர், தனது மாமியார் செந்தாமரையை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில், ‘‘நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். என் மனைவியை விட்டு பிரிவதை நினைத்து வருந்துகிறேன். அவரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்’’ எனக்கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனை கேட்டு அதிர்ந்த மாமியார் செந்தாமரை, மகளுக்கும், மருமகனின் குடும்பத்தினருக்கும் போனில் உடனடியாக தகவல் கொடுத்தார். அவர்களும் அதிர்ச்சியடைந்து விண்ணமங்கலம் ஏரிக்கரைக்கு ஓடினர். அங்கு மயங்கி கிடந்த ரமேசை மீட்டனர். சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்றிரவு இறந்து விட்டார். இல்லற வாழ்க்கை தொடங்கி மெல்ல மெல்ல நகர ஆரம்பித்த வேளையில் கணவன் தற்கொலை செய்து கொண்டது புவனேஸ்வரியின் தலையில் பேரிடியாக விழுந்தது. 3 மாதத்தில் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை நினைத்து அவர் கதறி அழுதார். இந்த சம்பவம் விண்ணாங்குளம் கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating