கேரளாவில் இருந்து மும்பை சென்றபோது ரெயிலில் தீக்குளித்தவர் பலி…!!

Read Time:2 Minute, 5 Second

201608230723283009_Man-attempts-to-immolate-self-in-moving-train-dies_SECVPFகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 16-ந்தேதி காயம்குளம் ரெயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது ரெயிலின் பொதுப்பெட்டியில் இருந்த வாலிபர் ஒருவர் கழிவறைக்குள் சென்று தனது உடலில் தீ வைத்துக் கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அவரை வெளியே இழுத்து தீயை அணைத்தனர். இதனால் ரெயிலில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வாலிபரை மீட்டு ஆலப்புழா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் நிவாஸ் (வயது 24) என்பதும் தெரியவந்தது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக நிவாஸ் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சக போலீசார் இருவரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்…!!
Next post ஆ‌ண்மையை அ‌திக‌ரி‌க்கும் எளிய இயற்கை வைத்தியம்..!!