மனைவி முன்னிலையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் கடத்தல்…!!
கொழும்பு -பம்பலப்பிட்டி -கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கடத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான மொஹம்மட் சகீப் சுலைமான் (வயது 29)என்பவரின் மனைவி பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அந்த முறைப்பாடு மீதான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (சி.சி.டி.) சிறப்பு பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன் தினம் நள்ளிரவு வேளையில் பிரபல உணவகம் ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்திவிட்டு மொஹமட் சகீப் சுலைமான் எனும் வர்த்தகர் பம்பலப்பிட்டி கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating