ரஷ்ய பிரஜைக்கு இலங்கையில் நேர்ந்த கதி…!!
ஹபாரதுவ பிரதேசத்தில் உள்ள கொக்கல கடலிற்கு நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை (61)நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நீரிழ் மூழ்கிய நிலையில் கரையில் ஒதுங்கி சுவாசிக்க கடினப்பட்டுக் கொண்டு இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர்,கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து ரஷ்ய பிரஜைஉயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலத்தின் பிரேத பரிசோதனைகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating