மாணவனின் காது வலிக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு ஆஸ்பத்திரி அலட்சியம் – தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது..!!

Read Time:3 Minute, 56 Second

201608231317425088_Govt-hospital-indifference-student-ear-pain-untreated_SECVPFசெங்கம் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 55). விவசாயி. விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சந்தோஷ் குமாருக்கு நேற்றிரவு திடீரென காது வலி ஏற்பட்டது. வலியால் அவர் துடித்தார்.

இதனை பார்த்து பதறிய ராமஜெயம் உடனடியாக மகனை செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆஸ்பத்திரியில் நீண்ட நேரத்திற்கு பிறகு, பொது மருத்துவர் ராமநாதனை பார்க்க அனுமதி கிடைத்தது.

டாக்டரிடம் ‘‘மகனுக்கு காதில் வலி ஏற்பட்டு துடிக்கிறார்’’ என ராமஜெயம் கூறினார். சந்தோஷ் குமாரின் காதை பிடித்து டாக்டர் பரிசோதித்தார். பின்னர் காது, மூக்கு சிறப்பு நிபுணர் நாளை காலையில் வருவார்.

அவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறிய டாக்டர் வலிக்கு மாத்திரை மட்டும் கொடுத்தார். மகன் காதில் வலி அதிகமாக இருப்பதாக கூறியதால், ஊசி போட்டு முதலுதவி சிகிச்சையாவது அளிக்க வேண்டும் என விவசாயி டாக்டரை வற்புறுத்தினார்.

டாக்டர் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம் ஆஸ்பத்திரி வளாகத்தில் கழுத்தை அறுத்து சாகப் போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும், ராமஜெயத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து டாக்டர் ராமநாதன், செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், தன்னை பணி செய்ய விடாமல் விவசாயி ராமஜெயம் தடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், விவசாயி ராமஜெயத்தை இரவோடு இரவாக கைது செய்தனர். அரசு ஆஸ்பத்திரியில் மகனின் காதுவலிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல் விவசாயி ராமஜெயத்தை கைது செய்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

மேலும், செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வருபவர்களை காத்திருக்க வைத்து அலட்சியம் செய்வதாகவும், முழு விசாரணைக்கு பிறகே போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி அருகே காதலை பிரிக்க வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட இளம்பெண் மீட்பு…!!
Next post இளம்பெண்ணை வசியம் செய்து சாமியார் அரங்கேற்றிய காரியம்… பெண்களே உஷார்…!! வீடியோ