அம்பையில் தலை துண்டித்து ரவுடி படுகொலை: போலீசார் விசாரணை…!!

Read Time:2 Minute, 43 Second

201608231638020515_rowdy-murder-police-investigation-in-ambai_SECVPFநெல்லை மாவட்டம் அம்பை பெரியகுளம் தெருவை சேர்ந்தவர் பாலன் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை தனது வீட்டு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் பாலனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரது தலையை துண்டித்து விட்டு அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி ஓடியது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலையை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த அம்பை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. கொலையுண்ட பாலன் மீது கொலை முயற்சி கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். எனவே அவர் முன்விரோதத்தில் கொல்லப்பட்டாரா? கொலையாளி யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலையான பாலனுக்கும், அவரது அண்ணனுக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. எனவே பாலனை அவரது அண்ணனே தீர்த்து கட்டினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்பு…!!
Next post வேகமாக பகிருங்கள் மறைந்திருக்கும் மஞ்சக்காமாலை எப்படி வந்தது என்று. பாருங்கள்…!! வீடியோ