ஜப்பானில் நன்றாக படிக்காததால் மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை..!!

Read Time:1 Minute, 55 Second

201608240428024502_Father-Kills-Son-For-Not-Studying-For-School-Exam_SECVPFஜப்பான் நாட்டில் தந்தையே தனது 12-வயது மகனை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். பள்ளி நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததற்காக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கெங்கோ சாடகே என்ற அந்த 48 வயது தந்தை, மகன் ரியோடாவின் மார்பு மீது சமையலறை கத்தியை கொண்டு குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜப்பான் நாட்டில் சிறந்த பள்ளிகளில் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு வைப்பது வழக்கம். குழந்தையின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இது கவுரவ பிரச்சனையாக கருதப்படுகிறது.

ரியோடா என்ற சிறுவன் ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அதிகப்படியான ரத்தம் வெளியேறிவிட்டதால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மருத்துவமனையில் அளித்த தகவலை அடுத்து காவல்துறையினர் தந்தையை கைது செய்தனர். தவறுதலாக தன்னுடைய மகனை கத்தியால் குத்திவிட்டதாக போலீசாரிடம் அந்த தந்தை கூறியுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலி: நிலநடுக்கத்தில் 10 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிப்பு..!!
Next post தண்டவாளம் அருகில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவரை, காதல் வலையில் வீழ்த்திய பேராசிரியை…!!