கும்பகோணத்தில் தொழிலாளி அடித்துக் கொலை..!!
கும்பகோணம் கல்லுப் பட்டறை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (60). கூலித் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் அருள் மேரி என்பவர் வசித்து வருகிறார்.
இவரிடம் மாரிமுத்து அடிக்கடி தககராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அருள் மேரி மகன் அருள் ராஜ் ஆவேசம் அடைந்து மாரிமுத்துவை அடித்து கீழே தள்ளி விட்ட £ர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு மாரி முத்து இறந்தார். முதலில் இதனை சாதாரண வழக்காக பதிவு செய்து இருந்த கும்பகோணம் மேற்கு போலீசார் மாரி முத்து இறந்ததை தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்தனர்.
அவரை கொலை செய்த அருள் ராஜை போலீசார் கைது செய்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating