மன்னாரில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது…!!

Read Time:2 Minute, 38 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் கட்டையடம்பன் பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து முதலில் 723 கிராம் எடை கொண்ட ஹெரோயின் பொதி மீட்டப்பட்டது. எனினும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுத்தோப்பில் அமைத்துள்ள மீன் வாடியில் பதுக்கி வைத்திருந்த மேலும் 272 கிராம் எடை கொண்ட ஹெரோயின் பொதி மீட்கப்பட்டது.

சுமார் 996 கிராம் எடை கொண்ட குறித்த ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் பெறுமதி ஒரு கோடி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 3 கிலோ 329 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதியும் மீட்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழுகிய நிலையில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு – கொழும்பில் சம்பவம்…!!
Next post யாழ்.பல்கலைக்கழக மாணவரின் வழக்கு ஒத்திவைப்பு..!!