கவனிப்பாரற்று மிதக்கும் சடலம் – கண்டுகொள்ள யாரும் இல்லை…!!

Read Time:2 Minute, 21 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (6)கொழும்பு – பேலியகொட பாலத்திற்கு கீழே சுமார் ஒரு மணி நேரமாக சடலம் ஒன்று மிதந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட பாலத்தின் வழியே கடந்து செல்லும் பலர் இன்று காலையிலிருந்து குறித்த சடலத்தை பார்வையிட்டுச் செல்வதுடன், புகைப்படங்களையும் எடுக்கின்றனர்.

ஆனால் மேற்கொண்டு எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை.

இது குறித்து பேலியகொட பொலிஸாரிடம் வினவியபோது,

“குறித்த சம்பவம் பற்றி எங்களுக்கு எதும் தெரியாது என்றும், எந்தத் தகவல்களும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை” என்றும் தெரிவித்தனர்.

மேலும், சடலம் பேலியகொட பாலத்திற்கு கீழே ஒருமணி நேரத்திற்கும் மேலாக மிதக்கின்றது. இதில் உயிரிழந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கூறப்படுகின்றது.

அடையாளம் காணப்படாத இந்த சடலத்தை மீட்பதற்கும், மேற்படி எடுக்கவேண்டிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. தலைநகரான கொழும்பில் இவ்வாறு கவனிப்பாரற்று சடலம் கிடப்பது அனைவரிடமும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இடத்தில் ஒரு பொலிஸ் அதிகாரிகள் கூட இருக்கவில்லை. தகவல் தெரிந்தும் எந்த அதிகாரிகளும் விரைந்து செயற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.பல்கலைக்கழக மாணவரின் வழக்கு ஒத்திவைப்பு..!!
Next post பொலிஸ் சட்டங்களை யாராலும் மீற முடியாது…!!