வவுனியாவில் விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு…!!
வவுனியாவில் விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் என சந்தேகிக்கப்படும் முப்பது துப்பாக்கிகள் ஓமந்தை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது
இன்று வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றை சுத்திகரிக்கும் போது அங்கு துப்பாக்கிகள் மண்ணினுள் புதைந்து இருப்பதனை அவதானித்த காணி உரிமையாளர், ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கி உள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தைப் பொலிஸார் குறித்த பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முப்பத்து எல் . எம் .யி ரக துப்பாக்கிகளை மீட்டுள்ளனர்.
இவை பாவனைக்கு அற்ற நிலையில் இருப்பதாகவும் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா நீதிமன்றில் அனுமதி பெற்று குறித்த பகுதியில் தோண்டும் பணியை ஆரம்பிக்க இருப்பதாக ஓமந்தை பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating