நைஜீரியாவில் அதிபரின் பெயரை நாய்க்கு வைத்தவர் கைது…!!

Read Time:2 Minute, 27 Second

201608251214268603_Nigerian-man-faces-charges-for-naming-his-dog-after_SECVPFஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சரிசம அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் தென்பகுதியில் கிறிஸ்தவர்களும், வடபகுதியில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு நைஜீரியாவில் உள்ள ஓகுன் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு அந்நாட்டின் அதிபரான முஹம்மது புஹாரியின் பெயரை சூட்டியுள்ளார். இதே பெயரை சொல்லி நாயை அழைப்பதுடன், நாயின் உடலின் இருபக்கங்களிலும் நைஜீரிய மொழியில் முஹம்மது புஹாரி என்ற பெயரையும் அந்நபர் எழுதி வைத்துள்ளார்.

அதிபர் பிறந்த வடக்கு நைஜீரியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு அந்நபரின் செயல் ஆத்திரத்தை உண்டாக்கியதால் சிலர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் விரைவில் மதமோதல்களை தூண்டி விடுவதற்கு காரணமாக அமைந்து விடலாம் என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார் நாட்டின் அதிபரின் பெயரை நாய்க்கு சூட்டிய அந்நபரை கைது செய்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு விசாரணைக்கு வரும்வரை அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு யோகுன் மாநில போலீஸ்துறை செய்தி தொடர்பாளர் அபிம்போலா ஓயேஏமி தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் மானத்தோடு விளையாடிய வாலிபன் கைது…!!
Next post ரெயிலில் சேட்டை செய்த இளைஞருக்கு இந்தப் பெண் கொடுத்த பரிசைப் பாருங்கள்! வீடியோ..!!