தேன்கனிக்கோட்டை அருகே குடி போதையில் பலாத்காரம் செய்து குழந்தையை தீர்த்துக் கட்டினேன்: தாயின் கள்ளக்காதலன் வாக்குமூலம்…!!

Read Time:4 Minute, 41 Second

201608251521002755_baby-murder-case-mother-paramour-arrest-near-Denkanikottai_SECVPFகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமம் பள்ளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்ன ஆசாரி. இவரது மனைவி சுவேதா(வயது 23).

இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் சுவேதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு பூஜா(1½) என்று பெயரிட்டு அவர் பாசமாக வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி சுவேதாவையும், 1½ வயது குழந்தை பூஜாவையும் தவிக்க விட்டு விட்டு சின்ன ஆசாரி திடீரென பிரிந்து சென்றார். அதன் பிறகு சுவேதா கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது, பெங்களூரை சேர்ந்த திருமணம் ஆகாத வாலிபர் உதயகுமாருக்கும் (வயது 25), சுவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

பின்னர் சுவேதா பள்ளப்பள்ளிக்கு வந்து விட்டார். அப்போது கள்ளக்காதலன் அவரை விடாமல் அங்கும் வந்தார். இதையடுத்து கடந்த 6 மாதமாக இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பெங்களூருக்கு சென்றிருந்த உதயகுமார் நேற்று முன்தினம் சுவேதாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது சுவேதா தன்னுடைய உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக தளி ஆஸ்பத்திரிக்கு செல்வதாகவும், அதுவரை தனது குழந்தையை பார்த்துக் கொள்ளும் படியும் உதயகுமாரிடம் கூறி விட்டு சென்றார்.

இதையடுத்து உதயகுமார் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் போதை தலைக்கேறியதும் அவர் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தை பூஜாவை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் குழந்தை கதறி அழுதுள்ளது. உடனே ஆத்திரம் அடைந்த உதயகுமார் குழந்தையை தரையில் தூக்கி அடித்தார். இதில் குழந்தைக்கு தலையில் பலத்த அடிப்பட்டது.

பின்னர் அவர் குழந்தையை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் குழந்தை செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் உதயகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையை பலாத்காரம் செய்து, குடிபோதையில் கொலை செய்து விட்டேன் என்று அவர் கூறினார்.

இது குறித்து போலீசார் முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது தெரிய வந்ததால் உதயகுமார் மீது கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைதொடர்ந்து, உதயகுமாரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

குழந்தை பூஜா உடல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயிலில் சேட்டை செய்த இளைஞருக்கு இந்தப் பெண் கொடுத்த பரிசைப் பாருங்கள்! வீடியோ..!!
Next post செம்பருத்தியின் ரகசியம் தெரியுமா?… இவ்வளவு பயன்களா?