மூன்று இடங்களில் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா…!!
நாட்டின் மூன்று இடங்களில் கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டி கடற்பரப்பில் 35 இலட்சம் பெறுமதியான 10 கேரள கஞ்சாப் பொதியினை கல்பிட்டி கடற்படையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.
கல்பிட்டி – கந்தகுலிய பிரதேச மீனவர் ஒருவரிடம் இருந்து இந்த கஞ்சா பொதியினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருந்த நிலையில் 60 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சா 30 கிலோ செம்பியன்பற்று பிரதேசத்தில் இருந்து இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வைத்திருந்த சந்தேகநபர் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கல்கிஸ்ஸ – படோவிட்ட பிரதேசத்தில் இருந்து ஹெரோயின் வைத்திருந்த நபர்ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating